யாழ்ப்பாணம் கொக்குவில் மற்றும் ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஆவா குழுவை சேர்ந்த இவர்கள் சுன்னாகம் பொலிஸ் பிரிவில் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டமையால் சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்’படுத்தப்படவுள்ளனர்.
இவர்களிடம் பொலிஸார் விசாரணை நடாத்தி வருகின்றனர்.