தங்காலை பகுதியில் புதையல் தோண்டியவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் சந்தேக நபர்கள் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டவேளையில் பொலிசார் சுற்றிவளைத்ததுடன் சந்தேக நபர்களையும் கைதுசெய்துள்ளனர். இதன்போது கைதுசெய்யப்பட்டவர்கள் 28, 31 மற்றும் 43 வயதுடையவர்களென தங்காலை பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை சந்தேக நபர்கள் தங்காலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.