வவுனியால் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த வண்டி சோதனைக்குட்படுத்தப்பட்டது. குறித்த வண்டியில் கேரள கஞ்சா அடங்கிய 13 பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்கள் புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 25 வயதுடைய நபர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சந்தேக நபர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.