போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணத்தை இலத்திரனியல் முறையில் செலுத்துவதற்கான நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது. விபத்துக்களை குறைப்பதற்கான ஆக்கபூர்வ திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரிய தரப்பினருக்கு அறிவித்துள்ளார்.