மீனவர் துறைமுகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் உற்பத்தி விலைகளில் ஏற்படும் முரண்பாடுகள் தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.வடக்கு-கிழக்கு மீனவர் அமைப்புக்கள் நேற்று பிரதமரை சந்தித்த போதே இதனை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதன் போது வடக்கு, கிழக்கில் மீன்பிடி தொழிலில் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் உடனடியாக உடனடியாக தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.