யுக்ரேனுக்கு சொந்தமான 3 கப்பல்களையும், அதன் பணியாளர்களையும் விடுதலை செய்யுமாறு நேட்டோ அமைப்பு ரஷ்யாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ரஷ்யாவின் செயற்பாட்டால நெருக்கடி நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது குறித்து ரஷ்யா கவனம் செலுத்த வேண்டுமென நேட்டோ அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை யுக்ரேனுக்கு எதிராக இராணுவ பலம் பயன்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் நேட்டோ அமைப்பு தெரிவித்துள்ளது.