மாத்தறை கொலைச்சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் என கருதப்படும். இளைஞன் எதிர்வரும் 3 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று குறித்த இளைஞன் மாத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியதாக பொலிசார் தெரிவித்தனர். மாத்தறை எலவில்ல பகுதியில் நேற்றுமுன்தினம் மாணவர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒரு மாணவர் உயிரிழந்தார். மாலை நேர வகுப்பொன்றுக்கு அருகில் வைத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேர் அடங்கிய குழு தலைமறைவாகயிருந்த நிலையில் பிரதான சந்தேக நபரென அடையாளம் காணப்பட்ட நபர் இன்று நீதிமன்றில் ஆஜரானார். அதேபோல் மற்றொரு சந்தேக நபரான இளைஞர் மாத்தறை பொலிசாரிடம் சரணடைந்துள்ளதாக தெரியவருகிறது.