சவூதி மன்னர் மொஹமட் பின் சல்மானின், தமது நாட்டுக்கான விஜயத்தை ரத்து செய்யுமாறு டியூனீசிய மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் கொலைக்கும், சவூதி மன்னருக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் தமது நாட்டுக்கு வருவதை தடுத்து நிறுத்துமாறு டியூனீசிய மக்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் டியூனீசியாவில் ஆர்ப்பாட்டமும் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் சவூதி மன்னரின் விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு டியூனீசிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சவூதி மன்னர் தமது நாட்டுக்கு பயணிப்பதனூடாக பொருளாதார ரீதியான நன்மைகள் கிடைக்கப்பெறுமென டியூனீசிய அரசு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.