களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு நாளை மறுதினம் 15 மணித்தியாலங்கள் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது. அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் இடம்பெறவுள்ளமையே இதற்கு காரணமாகும். இதற்கமைய வாத்துவ, வஸ்கடுவ, பொத்துப்பிட்டிய, களுத்துறை, கட்டுகுருந்த, நாகொட, பயாகல, பிலமினாவத்த உள்ளிட்ட பிரதேசங்களுக்கு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.