சீனாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர்கள் ஐவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. வீதிக்கருகில் நின்றுக்கொண்டிருந்த மாணவர்களே விபத்துக்கு முகங்கொடுத்துள்ளனர். வேகமாக வருகைத்தந்த மோட்டார் வாகனமொன்று மாணவர்கள் மீது மோதியுள்ளது. விபத்துடன் தொடர்புடைய மோட்டார் வாகனத்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த விபத்து திட்டமிட்டு செய்யப்பட்டதா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன.