கடற்பகுதிகளில் காற்றானது மணிக்கு 80 கிலோ மீற்றர் வேகத்தில் வீசக்கூடுமென வளிமணடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டையிலிருந்து, பொத்துவில் மற்றும் திருகோணமலை ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பகுதிகளில் இவ்வாறு பலத்த காற்று வீசும். இதனால் மீனவர்கள் மற்றும் கடற்படையினர் தமது கடற்றொழில் நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டாமென வளிமண்டலவியல் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழைக்கான சாத்தியம் காணப்படுகிறது. பிற்பகல் 02.00 மணிக்கு பின்னர் கடும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.