சவூதி அரேபியாவுடன் காணப்படுகின்ற தொடர்புகளை கைவிடப்போவதில்லையென அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் கொலை தொடர்பில் சவூதி மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும் அதனையும் தாண்டி சவூதி அரேபியாவுடன் இணைந்து செயற்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜீ-20 மாநாட்டின் போது இருதரப்புக்குமிடையில் விசேட பேச்சுவார்த்தையும் இடம்பெறவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.