ஆயிரக்கணக்கான புகலிடக்கோரிக்கையாளர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெக்சிக்கோவில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மெக்சிக்கோ எல்லைப்பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான ஆர்ப்பாட்டக்காரர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. புகலிடக் கோரிக்கையாளர்களை கெலிபோர்னியாவின் தென்பகுதியில் குடியேற்றுமாறு அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மெக்சிக்கோவினூடாக அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு பெருமளவிலான புகலிடக் கோரிக்கையாளர்கள் முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அவர்களின் வருகையை தடுக்கும் வகையில் அமெரிக்க – மெக்சிக்கோ எல்லைப்பகுதியில் பலத்த பாதுகாப்பும் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.