ரயிலில் யாசகர்கள் மற்றும் வர்த்தகர்களை தடைசெய்யும் பணிகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுமென புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது நகர்ப்புரங்களில் அதிவேக ரயில்களில் ஏறுவதற்கு யாசகர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய ரயில்களில் யாசகர்களுக்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில்களில் சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களிடமிருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டாமென புகையிரத திணைக்களம் பயணிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.