மரண தண்டனையை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையான நாடுகளின் ஆதரவுடன் குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனையை ஒழிக்க வேண்டுமென பல சர்வதேச நாடுகள் கோரிக்கை விடுத்திருந்தன. இதற்கமைய ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 3 வது குழுவில் மரணதண்டனையை இல்லாமல் செய்யும் வகையில் தண்டனையை நிறுத்தி வைக்க கோரும் வரைவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதுகுறித்தான வாக்கெடுப்பு ஐநா சபையில் இடம்பெற்றது. வாக்கெடுப்பில் தீர்மானத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 30 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை ஐநா தகவல்கள் தெரிவிக்கின்றன.