போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய பெண்ணொருவர் எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை நீதிமன்றம் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. 570 மில்லி கிரேம் போதைப்பொருளுடன் அதிசொகுசு வாகனமொன்றில் பயணித்த போது பொலிசார் குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளனர். நீண்டகாலமாக அம்பலாந்தோட்ட உள்ளிட்ட பல பகுதிகளில் ஹெரோயின் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குடு ராணி எனும் பெண்ணிண் மகளே கைதுசெய்யப்பட்டவரென தெரியவந்துள்ளது. அவர் 3 பிள்ளைகளின் தாயெனவும், அவரது கணவரும் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.