நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையைத்தொடர்ந்து இந்த மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. .
இந்த எச்சரிக்கையே இன்று மாலை வரை நீடிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர்பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.