பூமிக்கு மேலும் இரு நிலவுகள் இருப்பதாக ஹங்கேரி விஞ்ஞானிகள் உறுதிசெய்துள்ளனர். நீண்டகாலமாக காணப்பட்ட விவாதத்திற்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஹங்கேரி விஞ்ஞானிகள் பூமிக்கு இரு நிலவுகள் இருப்பதை ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர். குறித்த நிலவுகள் மங்கலான ஒளியை வெளியிடுவதால் அதை கண்டறிவதில் சிரமம் காணப்படுவதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். பூமியின் மேலதிக நிலவுகளை முதலில் கண்டறிந்த ஆராய்ச்சியாளரான கோர்ட் லெவ்ஸ்கியின் பெயர் ஒரு நிலவுக்கு சூட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.