முல்லைத்தீவு மாவட்டத்தில் நிர்த்தகக் குளம் உடைப்பெடுத்ததன் காரணமாக உயிருக்காக போராடிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்து 6 பேரும் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர். இந்த குளம் கடந்த இரு தினங்களுக்க முன்னர் உடைப்பெடுத்தள்டளது. இதன்போது தோட்ட பாதுகாப்புக்காகச் சென்றிரந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே குறித்த குளத்தின் உடைப்பெடுப்பின் காரணமாக வெளியேறமுடியாத நிலையில் சிக்கி மரமொன்றில் ஏறி உயிருக்கு போராடிக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.