சபாநாயகரின் கருத்துக்கள் எனக்கு தெரிந்த மட்டில் முற்றுமுழுவதாக அரசியல் யாப்பிற்கு முரணானதாகும். அத்துடன் அவரது கருத்து நாட்டில் தேவையற்ற முரண்பாடுகளை தோற்றுவிக்கும். ஜனாதிபதியினால் பிரதமர் ஒருவர் நியமிக்கப்பட்டதன் பின்னர் அப்பிரதமர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் யாப்பில் அவ்வாறு குறிப்பிட்டிருக்கபட்டிருக்கவில்லை. அமைச்சரவை நியமிப்பது மற்றும் அதனை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவரால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையை ஏற்றுக்கொள்ளாமல், முன்னாள் அமைச்சரவையை ஏற்றுக்கொள்வதாக கூறுவது அரசியல் அமைப்பில் இடம்பெறாத ஒரு விடயமாகும் என சட்டத்தரணி சிசிர வீரசூரிய தெரிவித்தார்.