ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு பிரிவு மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கிடையில் மோதல் உருவாகியுள்ளது. இதில் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு காவலரணொன்றுக்கு அருகில் பயங்கரவாதிகள் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். சுமார் மூன்று மணித்தியாலங்களாக மோதல் நீடித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.