சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக இந்தியாவுக்கு எடுத்துச்செல்ல முயற்சித்த 7 கிலோவிற்கும் அதிக தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. கற்பிட்டி இலிபன்துவ தீவை அண்மித்த பகுதியில் வைத்து குறித்த தங்கத்துடன் மூன்று சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கற்ப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.