தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரதான நகரங்களை அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீபாவளி பண்டிகை எதிர்வரும் 6ம் திகதி கொண்டாடப்படவுள்ளது. தற்போது ஹட்டன் உள்ளிட்ட நகரங்களுக்கு பெருமளவான மக்கள் வருகைத்தந்த வண்ணமுள்ளனர். அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கென பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பிரதான பொலிஸ் பரிசோதகர் மொஹமட் ஜெமில் தெரிவித்துள்ளார்.