சட்டவிரோதமான முறையில் எடுத்துவரப்பட்ட 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஒருதொகை சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களின் பயணப்பையை சோதனையிட்டபோது மறைத்துவைக்கப்பட்டிருந்த சிகரெட்டுக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 14 ஆயிரத்து 500 சிகரெட்டுக்கள் உள்ளிட்ட 72 பொதிகளை சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்கள் 30 முதல் 33 வயதானவர்களென விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் எடுத்துவரப்பட்ட ஒருதொகை சிகரெட்டுக்கள் மீட்பு
படிக்க 0 நிமிடங்கள்