அடிமட்டத்திலுள்ள ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை பாதுகாப்பதற்கு கட்சியிடம் எவ்வித வேலைத்திட்டங்களும் இல்லையென அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார். இக்கட்சி ஒவ்வொரு முறையும் தோல்வியடைவதற்கு இதுவே காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.