உலகிலேயே மிக உயரமான சிலை இன்றைய தினம் இந்தியாவில் திறந்து வைக்கப்படவுள்ளது. சிலையினை இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். இரும்பு மனிதர் எனப்படும் சர்தார் வல்லபாயின் உருவத்தை வடிவமைத்தே சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சிலையானது இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் நர்மதா மாவட்டத்தில் சர்தார் சரோவர் அணைக்கருகில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவை ஒருங்கிணைக்க சர்தார் வல்லபாய் படேல் அரும்பணியாற்றியதால் குறித்த சிலை ஒற்றுமை சிலை என அழைக்கப்படுகிறது. அமெரிக்காவிலுள்ள சுதந்திரதேவி சிலையை விட இரு மடங்கு உயரத்தில் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன