சிறுநீரக நோய் சிகிச்சைகள் மற்றும் சேமநலன்களுக்கான தேசிய நிதியத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
இந்த நோய் தொற்றிய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த நோயாளிகளுக்கு முறையாக சிகிச்சைகளை வழங்கி, நலன்புரி வசதிகளை பெற்றுக் கொடுப்பதென அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான விழிப்புணர்வுத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. சிறுநீரக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்ந்த உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படும்.