சமரபுலிகே நிராஜ் ரொஷான் எனும் அலி ரொஷான் உள்ளிட்ட ஏழு பிரதிவாதிகளுக்கு எதிராக மூவர் அடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்;டது.
அனுமதி பத்திரம் இன்றி சட்டவிரோதமாக யானைகளை தம்வசம் வைத்திருந்தமை இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டாகும். பிரதிவாதிகள் ஏழு பேரையும் ஒரு இலட்சம் ரூபா வீத ரொக்க பிணையிலும் 25 இலட்சம் ரூபா வீத இரண்டு சரீர பிணைகள் மூலமும் விடுவிப்பதற்கு மேல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. பிரதிவாதிகளின் வெளிநாட்டு பயணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. வழக்கு எதிர்வரும் எட்டாம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பாரிய அளவிலான ஊழல் மோசடி வழக்குகளை விசாரிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்ட முதலாவது விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 3வது வழக்கு இதுவாகும். சட்டவிரோதமாக நான்கு யானைகளை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் அதற்கு சூழ்ச்சி செய்தமை போன்ற 24 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபர் இவ்வழக்கினை தாக்கல் செய்திருந்தார்.