இன்று முதல் 3 சிறைச்சாலைகள் பாதுகாப்புக்கென பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். சிறைச்சாலை பாதுகாப்பு மற்றும் கைதிகளை பார்வையிட வருவோரை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடவுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சிறைச்சாலைகளில் இடம்பெறுகின்ற பல்வேறு குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் விசேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தீர்மானித்ததாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் ஆரம்பகட்டமாக அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்புபணியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதற்கு குறித்த சிறைச்சாலை கைதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதயைடுத்து எதிர்ப்பில் ஈடுபட்ட 8 சிறைக்கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.