தற்போதைய நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கடந்த ஒருசில வருடங்களுக்குள் சுகாதார சேவையின் முன்னேற்றத்திற்கு என ஒதுக்கிய நிதியானது ஏனைய அரசாங்கங்களின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிக்கு சமப்படுத்த முடியாது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு சில வருடங்களுக்குள் நாட்டின் சுகாதார துறையில் பாரிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்னவின் தலைமைத்துவத்தின் கீழ் சுகாதார துறையின் தரம் மேம்பட்டதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மருந்து பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்தி மக்களுக்கு தாங்ககூடியவாறு பணத்திற்கு சுகாதார சேவையை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டமை பிரதான வெற்றியாகும். நவீன தொழில்நுட்பங்களை சுகாதார சேவைக்கும் அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நான்காவது கைத்தொழில் புரட்சியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பிரதமர் புதிய தொழில்நுட்பங்களின் கீழ் சுகாதார சேவை பூகோள ரீதியில் விரிவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும் கருத்து தெரிவித்த பிரதமர்,
சுகாதார துறையில் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சுகாதார சேவைகளை பெற்று கொள்வதற்காக செலவாகின்ற நிதி பொது மக்களை பெரிதும் பாதிக்கின்றது. சுகாதார சேவைக்கும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்காகவும் கூடுதலான நிதி தேவைப்படுகின்றது. சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் தலைமைத்துவத்தின் கீழ் பொதுமக்களுக்கு சுகாதார வேவையை பெற்று கொள்வதற்காக செலவாகின்ற செலவுகளை கட்டுப்படுத்துவதற்காக வெற்றிகரமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கையில் எவருக்கும் சிறந்த சுகாதார சேவைகளை பெற்று கொள்ள முடியும். கடந்த ஒருசில வருடங்களை நோக்கும் போது நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் சுகாதார துறைக்னெ ஒதுக்கிய நிதியை நோக்கும் போது வேறு எந்த அரசாங்கத்தினாலும் ஒதுக்கப்பட்ட நிதிக்கு சமப்படுத்த முடியாது. கட்டடங்களை நிர்மாணிக்க மாத்திரம் செலவிடப்பட்ட நிதி மாத்திரம் அல்ல. எதிர்காலத்தில் சுகாதார துறைக்கு புதிய சேவைகளையும் தொழில்நுட்பங்களையும் அறிமுகப்படுத்த பாரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.