இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி ஆகியன குறிப்பிடத்தக்களவு வருமானத்தை ஈட்டியுள்ளதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கடந்த அரசாங்கத்தின் காலப்பகுதியில் அரச வங்கிகளின் உயர்மட்ட அதிகாரிகளை நியமிக்கும் நடவடிக்கை தன்னிச்சையாக இடம்பெற்றது. எனினும் தற்போதைய அரசாங்கம் முறையாக குறித்த செயற்பாடுகளை முன்னெடுப்பதாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல குறிப்பிட்டுள்ளார்.