பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 5 பேருக்கு எதிரான வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்வதற்கு அது தொடர்பான தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி குற்ற விசாரணை பிரிவு, நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
முறைகேடாக பயன்படுத்தப்பட்ட 15 மில்லியன் ரூபா நிதி, தனியார் நிறுவனமொன்றினூடாக பணச்சலவை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர்களுக்கெதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து வரும் குறித்த வழக்குடன் தொடர்புடைய சந்தேக நபர்களின் ஒருவரான இந்திக கருணாஜீவ என்பவரை கைதுசெய்வதற்கு சர்வதேச பொலிஸார் மூலம் திறந்த பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கை மீண்டும் எதிர்வரும் மார்ச் மாதம் 7ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.