4 இலட்சம் ரூபா பெறுமதியான மாணிக்ககல்லை மலவாயிலில் மறைத்து எடுத்துவந்த நபராருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 329 கெரட் எடைகொண்ட மாணிக்கக்ல்லே இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது. ருவாண்டாவிலிருந்து வருகைத்தந்த சந்தர்ப்பத்தில் அவர் கைதாகியுள்ளதாக விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். அவர் பேருவளை பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான நபரென தெரியவந்துள்ளது. சந்தேக நபரின் நடையை கண்காணித்த சுங்கப்பிரிவினர் அவரை கைதுசெய்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.