வட மாகாண சபை இன்றுடன் கலைக்கப்படவுள்ளது.கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்கோடபர் 23ஆம் திகதி நடைபெற்ற வட மாகாண சபை தேர்தலி தமிழ் தேசிய கூட்டமைப்பு 30 ஆசனங்களை பெற்று ஆட்சியமைத்த நிலையில் சி.வி. விக்னேஷ்வரன் முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் வடமாகாண சபையின் காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.தென் மற்றும் மேல் மாகாண சபைகளின் அதிகாரம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதமும் ஊவா மாகாண சபையின் காலம் அடுத்த வருடம் செப்டம்பர் மாதமளவிலும் நிறைவடையவுள்ளன.