நேற்றிரவு ஆடை விற்பனை நிலையத்தில் தீ பரவிய சம்பவமொன்று மகரகம-பழைய வீதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த தீ விபத்தினால் எந்த வித உயிராபத்துக்களும் ஏற்படாவிட்டாலும் ஆடை விற்பனை நிலையம் பெருமளவில் சேதமடைந்துள்ளது.
பொலிஸார் மற்றும் கோட்டை நகர சபையின் தீயணைப்பு பிரிவும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்ககுள் கொண்டு வந்துள்ளன.
தீ ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.