கந்தளாயில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 7 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பௌத்த பிக்குவொருவரும் உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கந்தளாய் வானெல சந்தியில் விபத்து இடம்பெற்றுள்ளது. டிப்பர் ரக வாகனமொன்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸொன்றும் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பஸ் வண்டியின் சாரதியும் காயங்களுக்குள்ளாகியுள்ளார். காயங்களுக்குள்ளானவர்கள் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.