நாவுரு தீவில் தங்கியிருந்த 11 குழந்தைகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வைத்திய சிகிச்சைகளுக்கென அவர்கள் அவஸ்திரேலியாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குழந்தைகள் மனநல பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக மனித உரிமை அமைப்புக்கள் சில தகவல் வெளியிட்டிருந்தன. சட்டவிரோத குடியேற்றவாசிகளாக அவுஸ்திரேலியாவுக்கு வருகை தருபவர்கள் நாவுரு தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.