சவூதி அரேபியாவில் இடம்பெறவுள்ள முதலீட்டு மாநாட்டை புறக்கணிக்கவுள்ளதாக சக்திவாய்ந்த முதலாளிமார் மற்றும் உலக நாடுகளின் அரச அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் படுகொலை சம்பவத்துடன் சவூதி அரேபியா தொடர்புபட்டுள்ளதையடுத்தே மாநாட்டை புறக்கணிக்க தீர்மானித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் மாநாடு ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் கஷோகியின் படுகொலை சம்பவம் தொடர்பில் நீதியான விசாரணை நடத்தப்படவேண்டுமென உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா, சவூதி அரேபியாவுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை கொண்டுள்ள நிலையில் மேற்கத்தைய நாடுகளும் இதுகுறித்து கவனம் செலுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன