பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்த்ர மோதிக்கிடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. புதுடில்லி நகரில் அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இருநாட்டு உறவுகளை மேலும் சக்திமிக்கதாக்குவதே இதன் நோக்கமாகும். இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்திய முதலீடுகள் மற்றும் நன்கொடை திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படுமென பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.