அமெரிக்கா மற்றும் மெக்சிகோ எல்லைப்பகுதியை முற்றாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இராணுவத்தினரை கொண்டு எல்லைப்பகுதியை மூடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புகலிடக்கோரிக்கையாளர்களின் பிரச்சினை காரணமாக நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எல் சல்வடோர், ஹொண்டுராஸ் மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளை சேர்ந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் மெக்சிகோ ஊடாக, சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். இதனை அடிப்படையாக கொண்டு பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்நிலையிலேயே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எல்லைப்பகுதியை முற்றாக மூடவுள்ளதாக எச்சரித்துள்ளார்.