புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் ஐவர் கைது
Related Articles
புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர்கள் ஐவர் மஹியங்கணை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மாலை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்திய உபகரணங்களையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். 26 மற்றும் 59 வயதுடைய மஹியங்கணை பகுதியைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதாகியுள்ளனர். அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.