யாழ்ப்பாணத்தில் நேற்று பொலிஸார் நடத்திய சுற்றி வளைப்பில் 41 பேர் கைது செய்யப்பட்டனர்.
யாழ்ப்பாணத்தின் 4 பொலிஸ் பிரிவுகளில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 151 பேருக்கு எதிராக போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம், மாணிப்பாய், சுன்னாகம் மற்றும் கோப்பாய் ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டன. வாள்வெட்டு குழுக்களையும், நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வருபவர்களையும் கைது செய்வதற்காக இச்சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன் போது பொலிஸாரால் தேடப்பட்ட 7 பேரும் நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 7 பேரும் வன்மு:றை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின் அடி;ப்படையில் 10 பேரும் மொத்தம் 41 பேர் கைது செய்யப்பட்டனர்.