முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பு இன்று உச்ச நீதிமன்றத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08ம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றத்தால் துமிந்த சில்வா உட்பட ஐவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.இந்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியிருந்தது.
பின்னர் மரண தண்டனை தீர்ப்புக்கெதிராக துமிந்த சில்வா உட்பட நால்வரினால் உச்ச நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உள்ளிட்ட 5 பேர் கொண்ட நீதியரசர்களினால் மேன் முறையீட்டு மனுவுக்கான தீர்ப்பை வழங்கினர்.துமிந்த சில்வாவின் பாதுகாவலராக இருந்த அநுர துஷார டி மெல் அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.
பாரத லக்ஷ்மன் பிரேமசந்திர கொலை வழக்கிலேயே துமிந்த சில்வா குற்றவாளி என கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.அது இன்று உச்ச நீதிமன்றினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.