பபுவா நியூகினியாவில் 7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது. ரபாவுல் நகரிலிருந்து 125 மைல்கல் தொலைவில் நிலஅதிர்வில் தாக்கம் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை நிலநடுக்கத்தை தொடர்ந்து சொலமன் தீவு மற்றும் பபுவா நியூகினியாவின் கரையோர பகுதிகளில் பாரிய அலைகள் மேல் எழுந்ததாக பசுபிக் சுனாமி அனர்த்த எச்சரிக்கை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.