சிரியாவின் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் மீது தொடர்ச்சியாக விமான தாக்குதல் நடத்தப்படுமென இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ரஷ்யா பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின்போது குறித்த விடயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகூ தெரிவித்துள்ளார். ரஷ்யா நவீன விமான தாக்குதல் தவிர்ப்பு கட்டமைப்பை சிரியாவுக்கு வழங்கியுள்ளது. எனினும் இஸ்ரேல், சிரியா மீது தொடர்ச்சியான விமான தாக்குதல்களை நடத்துகின்றமை சர்வதேச ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளது.