‘தொழில் முயற்சிக்கான சந்தை-2018’ எனும் தொனிப் பொருளில் மாபெரும் தொழில் சந்தை மற்றும் விற்பனை உள்ளிட்ட கண்காட்சி நேற்றையதினம் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கண்காட்சி 10, 11 ஆகிய தினங்களிலும் காலை 9.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை நடைபெறும். தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை, வர்த்தக வாணிப மற்றும் கைத் தொழில் அமைச்சு, திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகம், கிழக்கு மாகாண கைத்தொழில் திணைக்களம், கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம் ஆகியன இணைந்து இந்தக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளன.