வவுனியா கோவில்குளம் பகுதியில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவம் நேற்று இரவு 9.30 மணியளவில் பதிவாகியுள்ளது. கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வெளிநாட்டிலிருந்து வீடு திரும்பியிருந்த லதூஷன் எனப்படும் 28 வயது இளைஞரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குடும்பத்தினருடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இளைஞர் தற்கொலை செய்திருக்கலாமென நம்பப்படுகிறது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.