சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணங்களை வழங்குமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் போது, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதியொதுக்கீடுகளை பிரச்சினையாக கொள்ள வேண்டாமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஜனாதிபதி சீசெல்ஸ் இராச்சியத்திற்கு விஜயம் செய்துள்ளார். அங்கிருந்து தொலைபேசி ஊடாக இடர் முகாமைத்துவ அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு இவ்வாலோசனையை வழங்கியுள்ளார். உலர் உணவு பொருட்கள், குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சகல நலன்புரி வி;டயங்களையும் தொடர்ச்சியாக பெற்றுக் கொடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனது கவலையை தெரிவித்துக் கொள்வதுடன் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.