போதைப்பொருள் வர்த்தகர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொரளை மற்றும் கல்கிசை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைதாகியுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 68 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் 23, 30 மற்றும் 36 வயதானவர்களென தெரியவந்துள்ளது. அவர்கள் கல்கிசை மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.