அரசியலமைப்பு சபை புதிய உறுப்பினர் பெயர்கள் எதிர்வரும் 10ஆம் திக புதன்கிழமை சபாநாயகர் கரு ஜயசூரியவினால் அறிவிக்கப்படவுள்ளது.வெளிநாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாட்டுக்கு வருகை தந்ததும் இறுதி முடிவு எடுக்கப்பபடுமெனவும் எதிர்வரும் 10ஆம் திகதி மாலை அல்லது 11ஆம் திகதி அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்களின் பெயர்களை அறிவிக்க இருப்பதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே அரசியலமைப்பு பேரவையில் இருந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் புதிய உறுப்பபினர்கள் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.